skip to main |
skip to sidebar
10:52 PM |
ஆக்கம் :
கண்மணி/kanmani

உருவாக்கப் பட்டேனா
உடைந்து போனேனா
எனத் தெரியாத
காதலுக்காக
இருப்பதாய் நினைத்த
இல்லாத ஒன்றுக்காக
அப்பாவுடனான
பிடிவாத யுத்தத்தில்
அவர் கனவுகளை
அம்மாவுடனான
சமாதான யுத்தத்தில்
அவள் ஆசைகளை
உறவுகளுடனான
சமரச யுத்தத்தில்
அவர்களின்
எதிபார்ப்புகளை
கொன்றதற்கான
தண்டனை
ஆயுட்கைதியாய்
உன்னுடன்
13 மறுமொழிகள்::
கவிதை ஜூப்பரு...
நல்லா புலம்பினதை
நல்லாவே கவிதைக்கு கொண்டுவந்துட்டீங்க கண்மணி..
புலம்பல் கவிதையாய் மலர்ந்துள்ளது. டீச்சர் நலம்தானே ?
அமைதிச்சாரல் முத்து நன்றி
எல் கே உள்ளேன் ஐய்யா
அக்காவுக்கு ஒரு வணக்கம் ;)
ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து அதுதான் கேட்டேன்
/அப்பாவுடனான
பிடிவாத யுத்தத்தில்
அவர் கனவுகளை
அம்மாவுடனான
சமாதான யுத்தத்தில்
அவள் ஆசைகளை
உறவுகளுடனான
சமரச யுத்தத்தில்
அவர்களின்
எதிபார்ப்புகளை
கொன்றதற்கான
தண்டனை
ஆயுட்கைதியாய்
உன்னுடன்/
உண்மை
கவிதை அருமை.
எல்லோருமே இதைச் செய்திருகிறோமா:(
புலம்பலும் நல்லதே.
@?????நன்றி ஆயிஷா
@கோபிநாத்
கோபி நலமா எஙிருக்கிறாய் எப்பொ கல்யாண்சாப்பாடு
@வாங்க வல்லியம்மா நலமா உறவுகளின் எதிர்பார்ப்புகளைஸ் சிதைக்கும் காதல் தோற்றுப் போனால் புலம்பல் தானே
கவிதையின் ஆரம்பமே அசத்தல்,
“உருவாக்கப் பட்டேனா
உடைந்து போனேனா
எனத் தெரியாத
காதலுக்காக........”
கவிதை அருமை டீச்சர்.
Post a Comment