PAGE LOAD TIME

காதலுக்கும் நிறமுண்டு



நினைவுகளின் அலைக்கழிப்பில்
உறக்கம் தொலைத்த
இரவுகளின் நீட்சி
விழிகளில்
தீட்டிய வரிகளில்

பிரிவின் வெம்மையில்
இதயத்து வேதனை
 ஆறாய்ப் பெருக
அழுகையில் மிதக்கும்
கண்களில்

தனிமையின் நெருக்கத்தில்
தீண்டும் விரல் விலக்கி
மூக்குநுனி வரும்
பொய்க் கோபத்தில்

சகலமும் நீயெனக்
காதலாகிக் கசிந்துருக
கன்னங்களில்
மய்யம் கொள்ளும்
நாணத்தில்

எல்லாத் தருணங்களிலும்
இளஞ்சிவப்பே
காதலின்  நிறமென்றானது

17 மறுமொழிகள்::

எல் கே சொன்னது…

arumayaga ullathu
ungalai patthi solli iruken kandu pidinga

http://www.karthikthoughts.co.cc/2010/04/blog-post.html

அகல்விளக்கு சொன்னது…

ஆஹா....

கலக்கிட்டீங்க...

அருமையான கவிதை...

பிசிறில்லாமல் உள்ளத்தை அள்ளுகிறது...

:-)

Ahamed irshad சொன்னது…

ஆஹா கவிதை பிரமாதம்..

சந்தனமுல்லை சொன்னது…

:-)

கண்மணி/kanmani சொன்னது…

நன்றி
அகல்விளக்கு
அஹமத் இர்ஷாத்
முல்லை

பெயரில்லா சொன்னது…

//எல்லாத் தருணங்களிலும்
இளஞ்சிவப்பே
காதலின் நிறமென்றானது//

அழகா இருக்குங்க கண்மணி டீச்சர்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஆஹா..கலக்கியிருக்கீங்க கண்மணி மேடம்..

Chitra சொன்னது…

எல்லாத் தருணங்களிலும்
இளஞ்சிவப்பே
காதலின் நிறமென்றானது


......அப்புறம், Fair and Lovely க்கு என்ன வேலை? ஹி,ஹி,ஹி,.... மிகவும் அருமையான கவிதை.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கவிதை அருமை.

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Radhakrishnan சொன்னது…

கவிதை வெகு சிறப்பாக இருக்கிறது.

pudugaithendral சொன்னது…

:)

விஜய் சொன்னது…

ரொம்ப ரொம்ப பிடித்தது சகோதரி

வாழ்த்துக்கள்

விஜய்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Cute கவிதை... நல்ல இருக்குங்க கண்மணி

அபி அப்பா சொன்னது…

என்ன டீச்சர் "நீட்சி" மய்யம்"ன்னு ஒரே பின்னவீனத்துவ வார்த்தையா கொட்டிகிடக்கு கவிதையிலே!! சூப்பர் போங்க!

Kousalya Raj சொன்னது…

இப்பதான் உங்கள் பதிவை பார்க்ககூடிய வாய்ப்பு கிடைத்தது, உடனே தொடர தொடங்கி விட்டேன். மிகவும் பயனுள்ள பதிவுகள். எனக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி. கவிதை அருமை வாழ்த்துக்கள்!

Kousalya Raj சொன்னது…

உருப்படியான பதிவுகளுக்கு ஏன் அதிக பின்னூட்டம் வருவது இல்லை. இது என் ஆதங்கம் கண்மணி. உங்கள் பதிவு பலருக்கும் பிரயோஜனம் என்பதை மறுக்க முடியாது.

கருத்துரையிடுக

லேபிள்கள்

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1) reverse/flip text விளையாட்டு (1)